ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லும் இந்தப் போராட்டத்தை திசை திருப்ப அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் சதி செய்தாலும் அவற்றிற்கு இடம் கொடுக்காமல் இளைஞர்களும், போராட்டக்காரர்களும் அமைதியான முறையில் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள். எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவும் இல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளே விடாமல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இளைஞர்களின் இந்த எழுச்சியைக் கண்டு அரசியல் கட்சிகளே மிரண்டு போயுள்ளன. இந்த நிலையில் திரையுலகத்தினர் தனித் தனியாக போராட்டங்களை நடத்துவதைக் கண்டு போராட்டக் குழுவினரிடையே கோபம் எழுந்துள்ளது.
'போராட்டத்தைத் திருடாதே' என குரல் எழுப்பி சமூக வலைத்தளங்களில் நடிகர் சங்கத்தினரின் நாளைய போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் நடிகர் சங்கத்தினர் நாளை நடத்தும் போராட்டம் மீடியாக்கள் மூலம் திசை திரும்ப வாய்ப்புள்ளதாக அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
வேண்டுமென்றால் எங்களுடன் மெரினாவில் வந்து போராடுங்கள், அலங்காநல்லூரில் எங்களுடன் வந்து போராடுங்கள். நீங்கள் தனியாக போராட்டம் நடத்தி எங்கள் உணர்வுகளைக் கொச்சைப்டுத்தாதீர்கள் எனக் கூறி வருகிறார்கள்.