ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடித்த சந்திரலேகா, உதயமாகிறது, மஞ்சள் நிலா, குங்குமப்பொட்டு, நிலா ஆகிய படங்களை இயக்கியவர் நம்பிராஜன் என்கிற எம்.ஜி.ஆர் நம்பி. தற்போது உங்களில் ஒருவன் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதனை எம்.ஜி.ஆர் ஸ்டூடியோ சார்பில் சி.ராஜேஷ், என்.ஸ்ரீதேவி இணைந்து தயாரிக்கிறார்கள். உதயசங்கர் சோவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இது எம்.ஜி.ஆர் எழுதிய கதை என்கிறார் எம்.ஜி.ஆர் நம்பி. அவர் மேலும் கூறியதாவது:
1996ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உங்களில் ஒருவன் என்ற கதையை எழுதினார். அது ஒரு திரைப்படத்திற்கான மூலக் கதை. அதனை திரைக்கதையாக்கி படம் எடுக்கும் முயற்சிகள் அப்போது நடந்தது. பின்னர் அது முடங்கிப்போனது. இப்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் எழுதிய மூலக்கதைக்கு திரைக்கதை, வசனம், எழுதி நான் இயக்குகிறேன். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப திரைக்கதையை மாற்றியுள்ளேன் என்கிறார் எம்.ஜி.ஆர் நம்பி. படத்திற்கான பூஜையும் துவக்க விழாவும் நேற்று முன்தினம் நடந்தது, நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.