ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நூற்றுக்கணக்கான விளம்பர படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா பாலன். இவர் தற்போது அதர்வா நடித்து வரும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதோடு, 3 படங்களில் ஹீரோயினாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதுபற்றி ஐஸ்வர்யா பாலன் கூறுகையில், அதர்வா நடிக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் பிரணிதா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என பல நடிகைகள் நடிக்கும் நிலையில், ஐந்தாவதாக நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் அதர்வா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அப்படி நான் நடித்துள்ள காட்சிகள் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதனால் இந்த படம் வெளியாகும்போது கவனிக்கப்படும் நடிகையாகி விடுவேன். இதுதவிர நான் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறேன். அந்த படங்கள் குறித்த செய்திகள் விரைவில் வெளிவரும்.
மேலும், என்னை கவர்ந்த நடிகைகள் என்று சொன்னால் தீபிகா படுகோனே,சிம்ரன் ஆகியோர்தான். இதில் தீபிகா படுகோனே அவசரப்படாமல் வருடம் ஒரு படம் என்றாலும் தேர்ந்தெடுத்து நடிப்பார். அதனால் அவரைப்போலவே நல்ல படங்களை தேடிப்பிடித்து நடிக்கப்போகிறேன். மற்றபடி நானும் ஒரு டான்சர் என்பதால் சிம்ரனும் எனக்கு பிடித்தமான நடிகை. அவரைப்போன்று பாடல் காட்சிகளை நடனமாடி ரசிகர்களை கவர ஆசைப்படுகிறேன். அதோடு, கதைக்கு அவசியப்பட்டால் தேவையான அளவு கிளாமராக நடிப்பேன் என்று கூறும் ஐஸ்வர்யா பாலன், நல்ல டைரக்டர், நல்ல கேரக்டர், நல்ல கம்பெனி படங்கள் என்பதை மனதில் கொண்டுபுதிய படங்களை ஓகே பண்ணி வருவதாகவும் கூறுகிறார்.