ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
களவாணி படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியர் பரீத், சினிமாவில் பெற்ற அனுபவங்களை கொண்டு வீரய்யன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இனிகோ பிரபாகரனுடன் ஷைனி, பிரதியூஷா என்ற இரண்டு நாயகிகள் அறிமுகமாகிறார்கள். வேல ராமமூர்த்தி ஆடுகளம் நரேன் ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.என்.அருணகிரி இசை அமைக்கிறார். பி.வி. முருகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற திரைப்படங்களிலிருந்து இது வித்தியாசமான திரைக்கதையை கொண்டது.
இதுபற்றி இயக்குனர் பரீத் கூறியதாவது: இது 1990களில் நடக்கும் கதை. நான் சரித்திர பிரியன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்ப்பது எனக்கு பிடிக்கும். அப்படித்தான் ஒரு முறை கல்லணையிலிருந்து பூம்புகார் வரைக்கும் காவிரி நதி கரையில் பயணம் செய்தேன். அப்போது பல இடங்களில் பாழடைந்த கோவில்கள், மண்டபங்கள், சிறிய அரண்மனைகள் இருப்பதை கண்டேன். கோவில்கள் சோழர்கள் கட்டியது, மண்டபங்கள் அவர்கள் மக்களுக்கு கட்டிக் கொடுத்தது. அரண்மனைகள் அவர்கள் அங்கு வரும்போது தங்கிக் கொள்வதற்கு.
ஒவ்வொரு கோவில், அரண்மனைக்கு பின்னால் அந்தந்த பகுதி மக்கள் ஒரு கதை சொன்னார்கள். அந்த கதையை ஒருங்கிணைத்து புதிதாக இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி உருவானதுதான் வீரய்யன் கதை. சோழ மன்னர்கள் கட்டிய கோவில்கள், அரண்மனைகளில் படமாகியுள்ளது. காட்சிகள் அங்கு நடக்கும்போது சோழர்கள் காலத்தில் அங்கு என்ன நடந்தது என்பதும் சேர்ந்து கதையோடு பயணிக்கும். இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்றார் பரீத்.