காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த புரியாத புதிர் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்டது. பலவேறு பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகவில்லை. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.கே.சதீஷ்குமார் படத்தை வாங்கி டிசம்பர் 23ந் தேதி வெளிவருவதாக அறிவித்தார், ஆனால் வரவில்லை. அதன்பிறகு பொங்கலுக்கு கட்டாயம் வரும் என்றார் வரவில்லை. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ரபேல் ஸ்டூடியோ தீபன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
எங்கள் அனைவருக்கும் வருத்தமான தருணம் இது. முதன் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் நான், புரியாத புதிர் பொங்கல் திருவிழா நாளில் வெளியாவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் இருந்தேன். அதுமட்டுமின்றி படத்துக்கு எல்லா தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவு புதிய உற்சாகத்தை கொடுத்தது.
ஆனால் என்னுடைய தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் ஆக்கோ திரைப்படம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையால் புரியாத புதிர் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி எங்களின் வெற்றி தள்ளிபோயிருக்கிறதே தவிர, மறுக்கப்படவில்லை. விரையில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். என்கிறார் தீபன்.