கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த புரியாத புதிர் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்டது. பலவேறு பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகவில்லை. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.கே.சதீஷ்குமார் படத்தை வாங்கி டிசம்பர் 23ந் தேதி வெளிவருவதாக அறிவித்தார், ஆனால் வரவில்லை. அதன்பிறகு பொங்கலுக்கு கட்டாயம் வரும் என்றார் வரவில்லை. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ரபேல் ஸ்டூடியோ தீபன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
எங்கள் அனைவருக்கும் வருத்தமான தருணம் இது. முதன் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் நான், புரியாத புதிர் பொங்கல் திருவிழா நாளில் வெளியாவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் இருந்தேன். அதுமட்டுமின்றி படத்துக்கு எல்லா தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவு புதிய உற்சாகத்தை கொடுத்தது.
ஆனால் என்னுடைய தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் ஆக்கோ திரைப்படம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையால் புரியாத புதிர் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி எங்களின் வெற்றி தள்ளிபோயிருக்கிறதே தவிர, மறுக்கப்படவில்லை. விரையில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். என்கிறார் தீபன்.