விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சமீபகாலமாக விமலின் படங்கள் அவருக்கு சரியாக அமையவில்லை. அதனால் தானே சொந்தமாக மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தார். ஆனந்தி, பிரபு, சரண்யா, ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, வம்சி கிருஷ்ணா, நீலிமா ராணி, ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். பூபதி பாண்டியன் இயக்குகிறார்.
இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதி படத்தை முடிப்பதற்கு திட்டமிட்டு கடந்த டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பை நடத்த ஆயத்தமானர். ஆனால் வர்தா புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் புயலால் மரங்கள் விழுந்து விட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் "மன்னர் வகையறா" படத்தின் வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்திருந்த விமல் " மன்னர் வகையறா " திரைப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வரும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதால் நடுவில் ஒரு சிறிய படத்தை முடித்து விட திட்டமிட்டுள்ளார்.
"துருவங்கள் பதினாறு" பாணியில் குறும்பட இயக்குனர் தரண் சொன்ன கதை பிடித்து போனதால் அந்த கதைக்கு ஓகே சொல்லியவர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேதி கொடுத்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய ஜாக்ஸ் மீண்டும் இந்த திரில்லர் படத்திற்கு இசை அமைக்கிறார். நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. படத்தை மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கிறார். மார்ச் முதல் வாரத்தில் படத்தை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.