ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், இதயக்கனி, புரட்சித் தலைவர், கொடைவள்ளல் என்றெல்லாம் அவரது ரசிகர்களால் வாயார புகழப்பட்டவர் மறைந்த முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர். கொடுத்தால் வள்ளல்... நடித்தால் துள்ளல். அவரது வெற்றிக்கு இவை தான் காரணங்கள். ஜன.17 ம் தேதி அவரது பிறந்த நாள் நுாற்றாண்டு. இதையொட்டி தினமலர் இணையதளம் தருகிறது இந்த விசேஷ பதிப்பு....
1917 ஜன., 17ல் இலங்கையின் கண்டியில் பிறந்தார் எம்.ஜி.ராமச்சந்திரன். இவரது பெற்றோர் மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. தந்தையின் வேலை நிமித்தமாக கேரளாவில் குடியேறினார். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன் தமிழகத்தின் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., வருமானத்திற்காக சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார்.
அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தார். பிஞ்சு மனதில் நஞ்சை கலக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாக்களில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் ஒரு கொள்கையாக கொண்டிருந்தார்.
தேசிய விருது
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் 'சதிலீலாவதி'. 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த 'ராஜகுமாரி' படம் தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான 'ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான 'தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். அவர் நடித்த 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' திரைப்படம் மூலம் அரசியல்வாதியாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். தி.மு.க.,வின் உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாத்துரையின் மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட 'கருத்து வேறுபாடு' காரணமாக தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்.
முதல் நடிகர்
இந்தியாவில் முதன்முதலாக நடிகராக இருந்து முதல்வரானவர் இவரே.
விருதுகள்
இரண்டு முறை பிலிம்பேர் விருது, தேசிய விருது, கவுரவ டாக்டர் பட்டம் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
இயக்குநர் அவதாரம்
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபர், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்
'சத்யா ஸ்டூடியோ மற்றும் எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் என்பதை நடத்தினார். இதன் சார்பில் பல்வேறு படங்களில் நடித்தார். 'தாய் என்ற வார இதழையும், அண்ணா என்ற தமிழ் தினசரி நாளிதழையும் நிறுவி, அதன் ஆசிரியராகவும் இருந்தார்.
செத்துப் பிழைத்தவர்
1967 ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆரின், ராமாவரம் தோட்டத்துக்கு, எம்.ஆர்.ராதா, தயாரிப்பாளர் வாசுவுடன் சென்றார். மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென தன் கை துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். இதில் எம்.ஜி.ஆரின் கா;தில் குண்டு பாய்ந்தது. பின் எம்.ஆர்.ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.ஜி.ஆருக்கு காதில் பாய்ந்த குண்டை அகற்ற ஆப்பரேஷன் நடந்தது. இந்த சம்பவத்தால் அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த பாதிப்பினால் உடைந்து போகாமல் தன்னம்பிக்கையுடன் போராடி பல்வேறு சாதனைகளை படைத்தார்.