ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய முன்னணி நாயகிகளில் யாருக்கும் கிடைக்காத ஒரு பெயர் காஜல் அகர்வாலுக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் அவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். 'கைதி நம்பர் 150' படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது சிலருக்கு சந்தேகம் இருந்தது. சிரஞ்சீவியின் மகன் ராம்சரணுடன் 'மகதீரா' படத்தில் நடித்தவர், அப்பாவுடன் நடித்தால் பொருத்தமாக இருக்குமா என சிலர் கேள்வி எழுப்பினார்கள். தெலுங்குத் திரையுலகில் 'மகதீரா' படம் ஒரு மறக்க முடியாத படம். காஜல் அகர்வால் நடிப்புக்காகவும் பேசப்பட்ட படம். அந்தப் படம் மக்கள் மனதில் இன்னும் இருக்கும் போது, மகனுடன் ஜோடி சேர்ந்தவுடன் அப்பாவுடன் ஜோடி சேர்ந்தால் எப்படி என சந்தேகித்தார்கள்.
ஆனால், அந்த சந்தேகங்கள் அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டது. 'கைதி நம்பர் 150' படத்தில் சிரஞ்சீவிக்கும் பொருத்தமான ஜோடியாகவே காஜல் அகர்வால் திரையுலகில் தெரிந்தார். அதோடு, அவருடைய கதாபாத்திரத்தில் சிறப்பாகவும் நடித்துள்ளார் என இப்போது அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அப்பா, மகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த இரண்டு படங்களுமே தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஹிட் படங்கள் என்பதில் காஜல் அகர்வால் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.காஜல் அகர்வால்தான் சிரஞ்சீவியின் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தவரே சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்தான் என்பது கூடுதல் தகவல்.