ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சோ மறைவுக்குப் பின், நாட்டில் நடக்கும் அசாதாரண அரசியல் சூழலை பார்க்கும் போது, மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது, என, நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
துக்ளக் இதழின் ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: துக்ளக் சோ, ஒரு சிங்கம் மாதிரி இருந்தவர். ஒன்றிரண்டு ஆண்டு காலம் அவர், உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்த போது, அவரை பார்த்து மனம் வேதனைப்படும். சோவிடம் பேசியபோது, அவரே என்னிடம் சொன்ன தகவல்... அதாவது, சோவை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பார்க்க சென்றபோது, நான் இருக்கும் வரை, நீங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு, நான் இருப்பேன் என, சோ கூறியிருக்கிறார். அதேபோல், அவர் இருக்கும் வரை, சோ, இருந்தார். அவர் மறைந்த உடன், சோவும் மறைந்தார்.
அவரைப்பற்றி நினைப்பு வரும்போதும், நாட்டில் நடக்கும் சில அசம்பாவித, அசாதாரண அரசியல் விஷயங்களை பார்க்கும்போது, அவர் இப்போது இருந்திருந்தால், எப்படி இருக்கும் என நினைக்கும் போது, மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. சோவுக்கு, எல்லா திசைகளிலும், எல்லா துறைகளிலும் நண்பர்கள் உண்டு. அவர், நட்பை மதித்தவர்; பணத்தை மதிக்காதவர். அவ்வையார் இளமையில் முதுமையானது போல, சோவுக்கும் வழுக்கைத்தலை ஒரு வரம் போல தான். அந்த தலைக்குள், பல திறமைகள் வந்து கொட்டின. ஒரு விஷயத்தை எப்படி சொல்ல வேண்டுமோ, அதை அப்படி சொல்லி சாதிப்பவர் சோ.
சோவும், எம்.ஜி.ஆரும் குடும்ப நண்பர்கள். மாட்டுக்கார வேலன் படம் வெளிவந்த போது, சோவிடம், பத்திரிகைகளின் விற்பனை பற்றி, எம்.ஜி.ஆர்., பேசிக்கொண்டிருந்தார். அப்போது, தரமான பத்திரிகைகள் ஏன் விற்பனையாவதில்லை? என, எம்.ஜி.ஆர்., கேட்டார். அதற்கு, நல்ல படம் எல்லாம் ஓடாமல், மாட்டுக்கார வேலன் படம் ஓடுகிறதல்லவா... அப்படித்தான்! என்றாராம். இப்படி, எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி கணேசனிடமும் துணிச்சலாக, பதில் சொல்லியுள்ளார்.
அவர், பெரிய அரசியல் பத்திரிகை நடத்தவில்லை என்றாலும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். அவர் உண்மையை பேசி, புகழுடன் வாழ்ந்தார். அப்படி நாமும் வாழ்ந்தால் மரியாதையுடன் வாழலாம். இவ்வாறு அவர் பேசினார்.