ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எந்தவொரு சூழலுக்கான பாடலாக இருந்தாலும், அதுபற்றி நன்கு ஆராய்ந்து ஆய்வு செய்து பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்கிறார் பாடலாசிரியர் பிரியன். தற்போது பத்து படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் அவர், அய்யனார்வீதி படத்தில் இடம்பெற்றுள்ள அய்யனாரைப் பற்றிய பாடலுக்காக 108 அய்யனார் பெயர்களை ஆய்வு செய்து எழுதியிருப்பதாக சொல்கிறார்.
அவர் மேலும் கூறும்போது, நான் இதுவரை 400 பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில், அஞ்சாதேயில் மனசுக்குள் புதுமழை, நான் படத்தில் மக்காஏல, சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே, பிச்சைக்காரனில் உனக்காக வருவேன் உயிர்கூட தருவேன், கோலிசோடாவில் ஜனனம் ஜனனம் என பல படங்களில் எனது பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. இதில், கடந்த ஆண்டில், பிச்சைக்காரன் படத்தில் எழுதிய, உனக்காக வருவேன் என்ற பாடலுக்காக இரண்டு அமைப்புகளும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை வேறு இரண்டு அமைப்புகளும் எனக்கு கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்நிலையில், தற்போது பத்து படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் சித்திரம்பேசுதடி-2, அய்யனார் வீதி ஆகிய படங்களின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன. இதில் அய்யனார் வீதி படத்தில் அய்யனார் பற்றிய ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலில் தமிழகத்திலுள்ள 108 அய்யனார் கோயில்கள் எந்தெந்த ஊர்களில் உள்ளது. அந்த ஊர்களில் உள்ள அய்யனார் களின் பெயர் என்ன என்பதை ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். இதுவரை நான் எழுதியுள்ள பாடல்களில் இந்த ஒரு பாடலுக்காக நிறைய மெனக் கெட்டிருக்கிறேன் என்று கூறும் பாடலாசிரியர் பிரியன், அய்யனார் வீதியிலேயே ஆடி வரும் சாமி -ன்று தொடங்கும் அந்த பாடலில் 12 உயிரெழுத்துக்களான அ -வில் தொடங்கி ஒள -வரை முதல் பன்னிரெண்டு வரிகளும் தொடங்குவது போல் வரிகளை எழுதியிருக்கிறேன். அதன்பிறகுதான் 108 அய்யனார்களின் பெயர்களும் அந்த பாடலில் இடம்பெறுகிறது. ஜனவரி இறுதியில் இப்படத்தின் ஆடியோ வெளியான பிறகு இந்த பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.