சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
திரையுலகைச் சேர்ந்தவர்கள் திடீரென ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகள கிளர்ந்து எழுந்துள்ளனர். நடிகை குஷ்பு "லிகட்டுக்கு எதிரா 5 குற்றசாட்டுகளைத்தான் பீட்டா அமைப்பினர் கூறுகிறார்கள். அதற்கு ஆதரவாக 50 ஆயிரம் ஆதாரங்களை தர முடியும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. ஜல்லிக்கட்டை எதிர்க்கும் 'பீட்டா' அமைப்புக்கும், அதை சார்ந்தவர்களுக்கும் இது கண்ணுக்கு தெரியவில்லை. மடகாஸ்கர் நாட்டு அரசிடம் பேசி அங்குள்ள ரூபாய் நோட்டில் உள்ள ஜல்லிக்கட்டு புகைப்படத்தை நீக்க முடிந்ததா? ஜல்லிக்கட்டால் நிறைய நன்மைகள் இருக்கின்றன.
விவசாயிகள் காளையையோ, பசுவையோ எப்படி அன்பாக பாதுகாக்கிறார்கள் என்பதை நிரூபிக்க லட்சக்கணக்கான வீடியோவை என்னால் தரமுடியும். ஜல்லிக்கட்டை எதிர்க்க 5 தவறுகளை சுட்டிக்காட்டுவீர்கள் என்றால் ஜல்லிக்கட்டை நாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் என்பதற்கு 50 ஆயிரம் சரியான ஆதாரங்களை எங்களால் காண்பிக்க முடியும். ஜல்லிக்கட்டில் விதிமுறைகளை ஏற்படுத்தலாம். அதை மதிக்கவும் செய்யலாம். ஆனால் தடை என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு குஷ்பு எழுதியுள்ளார்.