ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான ‛தங்கல்' படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி கொண்டிருக்கிறது. இதன் சக்சஸ் மீட் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமீர்கான், நான் யாரையும் போட்டியாக நினைத்தது கிடையாது என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறுகையில், ‛‛இந்த சினிமாவில் ஷாரூக்கான், சல்மான், அஜ்ய் தேவ்கன், அக்ஷ்ய் குமார், ரன்பீர், ரன்வீர் சிங்... என ஏகப்பட்ட அருமையான நடிகர்கள் இருக்கிறார்கள். சில நடிகர்கள் நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தால் நான் மிகவும் ரசிப்பேன். உதாரணத்திற்கு சல்மானின் சுல்தான், தபாங் படங்களை ரசித்தேன், அதேப்போன்று சஞ்சய்யின் முன்னாபாய் படமும் என்னை மிகவும் கவர்ந்தது. என்னை சுற்றி இருப்பவர்கள் இதுபோன்று நல்ல படங்களில் நடிக்கும்போது அதுவே எனக்கு உத்வேகத்தையும் தருகிறது. நான் யாரையும் போட்டியாக நினைக்க மாட்டேன், என்னை நானே போட்டியாக கருதுவேன். போட்டி என்பது ஒரு வலுவான வார்த்தை, எனவே நான் ஒரு சிறந்த நடிகனாக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது அமீர்கான், ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் அமீர்கானுடன் அமிதாப்பும் நடிக்க உள்ளார். இப்படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.