அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் த்ரிஷாவை காயப்படுத்தாதீர்கள் என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக இருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்காக தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், ரஜினி, சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு வேண்டியும், பீட்டாவிற்கு எதிராக கோஷங்களும், போராட்டங்களும் மாநிலம் முழுக்க நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பீட்டாவில் அங்கம் வகிக்கும் த்ரிஷாவிற்கு நேற்று எதிர்ப்பு கிளம்பியது. காரைக்குடியில் நேற்று நடந்த அவரது கர்ஜனை படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது.
இதற்கு த்ரிஷா, தன் டுவிட்டரில் ‛‛தன்னை என்ன மிரட்டினாலும் நான் பயப்படப்போவது இல்லை என்று கூறியதோடு, தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என்றும் தெரிவித்தார். அதோடு, ஒரு பெண்ணையும், அவரது குடும்பத்தையும் மதிக்க தெரியாதவர்கள் தமிழர்களா, இந்த செயலுக்கு தமிழன் வெட்கப்பட வேண்டும்'' என்றும் கடுமையாக சாடினார்.
இந்நிலையில், த்ரிஷாவை காயப்படுத்தாதீர்கள் என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுப்பற்றி கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛த்ரிஷாவை காயப்படுத்துவதை நிறுத்துங்குள். அவருக்கும் நமக்கும் உள்ள வேற்றுமை ஊரறியட்டும், கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்...'' என்று கூறியுள்ளார்.