ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் முத்துராமலிங்கம். அவருடன் நெல்போலியன், பிரியாஆனந்த், சுமன், வம்சி கிருஷ்ணா, விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜதுரை இயக்கியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நெல்லை மாவட்ட மண்வாசனைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கெளதம் கார்த்திக் முத்துராமலிங்கம் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழு சான்றிதழுக்காக படம் திரை யிடப்பட்டது.
அப்போது படத்தைப்பார்த்து தணிக்கைக்குழுவினர், ஒரு காட்சியில் போலீசாக நடித்திருப்பவர், ஒருவரது கையை வெட்டி தொங்க விடுவது போன்ற காட்சி மற்றும் சிலம்பாட்டக்காரரான நெல்போலியன் வில்லனின் காதை தனது கம்பு சுற்றலால் உடைப்பது போன்ற காட்சிகளில் வன்முறை அதிகமாக இருப்பதாக சொல்லி கத்தரிக்க சொன்னார்களாம். இல்லையேல் யுஏ சான்றிதழ்தான் தர முடியும் என்று கூறிவிட்டார்களாம். அதனால் அந்த காட்சிகளின் வீரியத்தை முடிந்த வரை குறைத்து இப்போது யு சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள்.