ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அதற்கு தடை கோரும் பீட்டா அமைப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் உரக்க குரல் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, பீட்டாவில் ஒரு அங்கமாக உள்ளார். தற்போது இவர் ‛கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வருகிறது. நேற்று காரைக்குடி அருகே நேமத்தான்பட்டி என்ற ஊரில் கர்ஜனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது அங்கு வந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், த்ரிஷா படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. மேலும் த்ரிஷாவிற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. அதோடு அவர் இறந்து போனதாக சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் வெளியானது.
இந்நிலையில் த்ரிஷா இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை. என்னை இறந்துவிட்டதாக சித்தரித்து, என் குடும்பத்தையும் தரக்குறைவாக பேசியது என்னை அதிர்ச்சி அடைய செய்தது. சமூக வலைதளங்களை இலவசமாக பயன்படுத்துவது தான் இதுபோன்ற மோசமான செயலுக்கு காரணம்.
ஒரு பெண்ணையும், அவரது குடும்பத்தையும் மதிக்க தெரியாதவர்கள், மரியாதை குறைவாக நடத்துவது தமிழனின் கலாச்சாரமா...?, இந்த செயலுக்கு தமிழன் வெட்கப்பட வேண்டும். சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் செயல்களுக்காக தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை. இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு த்ரிஷா கூறியுள்ளார்.