ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்.கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்தி நாயகனாக நடித்துள்ள படம் இவன் தந்திரன். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருப்பவர் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன். அவருடன் இணைந்து நடித்திருப்பவர் ரன்வீர்சிங். இந்த படத்தில் வில்லனுடன் இணைந்து நடித்திருக்கும் அவர், அடுத்தபடியாக கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார்.
இதுபற்றி ரன்வீர்சிங் கூறுகையில், சினிமாவில் பெரிய வில்லனாக வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதற்காக எனது பாடிலாங்குவேஜை பக்காவாக மாற்றி விட்டு களத்தில் இறங்கியிருக்கிறேன். எனது ரோல் மாடல் இந்தி நடிகர் அம்ரிஸ் புரி, பிரகாஷ்ராஜ் ஆகிய நடிகர்கள்தான். இவர்களில் தமிழில் பிரகாஷ்ராஜ் போன்று ஒரு வில்லனாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அவர் நடித்த கில்லி, காஞ்சிவரம் போன்ற படங்கள் ரொம்ப பிடிக்கும். அவர் என்னை கவர்ந்த வில்லன் என்றாலும், ஒரு தனித்துவமான வில்லனாக வேண்டும் என்று அடுத்தபடியாக சில முன்னணி நடிகர்களின் படங்களில் ஷோலோ வில்லனாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறேன். விரைவில் அந்த படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் அதிரடி வில்லனாக வலம்வருவேன் என்கிறார் ரன்வீர்சிங்.