ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக இருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்காக தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலரும் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.
தமிழ் கலாச்சாரத்தின் குரலாக எழுந்துள்ள இந்த விவகாரத்திற்காக தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்கள் சிலர் இன்னும் தங்களது ஆதரவுக் குரலை எழுப்பாமல் அமைதி காத்து வருகிறார்கள். அவர்களது படங்களுக்குப் பிரச்சனை வரும் போது மட்டும் குரல் எழுப்புபவர்கள், இப்போது தங்களது படங்களைப் பார்த்து ரசிக்கும், கொண்டாடும் மக்களுக்காக குரல் எழுப்பாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்கள் இது குறித்து இன்னும் தங்களது கருத்தை சொல்லாமல் இருக்கிறார்கள். சிறிய நடிகர்கள் கூட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என வெளிப்படையாக அறிவிக்கும் போது சமூக வலைத்தளங்களில் தாங்கள்தான் டிரென்டிங்கில் இருக்கிறோம் என அவர்களது ரசிகர்கள் கூறிக்கொள்ளும் மேலே சொன்ன நடிகர்கள் இதுவரை எதுவும் சொல்லாமல் இருக்கிறார்களே, ஏன் ?. தங்களது படங்களுக்குப் பிரச்சனை வந்தால் மட்டும் கருத்து சொல்வார்களோ...?.
இதனிடையே ஜல்லிக்கட்டு என்றால் என்ன..? என்று சில தினங்களுக்கு முன்னர் கேள்வி கேட்டு ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட ஆர்யா, தற்போது தான் நடிக்கும் சந்தனதேவன் படத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு தருவது போன்று பேசியிருக்கிறார். ஏனென்றால் இப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.