சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கமலிடமிருந்து பிரிந்த கௌதமி அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதை எல்லாம் வைத்து, வாஜ்பாய் காலத்திலிருந்து பா.ஜ.க. உறுப்பினராக உள்ள கௌதமி, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான் கடந்த வாரம் கௌதமி சம்மந்தப்பட்ட ஒரு வீடியோ வெளிவந்தது.
அந்த வீடியோவில் தனியார் எஃப்.எம் பேட்டி நிகழ்ச்சி ஒன்றில், ஆர்.ஜே. ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாது என கோபப்பட்ட கௌதமி, 'ஒரு நிகழ்ச்சியின் பாதியிலேயே தான் வெளியேறுவது இதுதான் முதல்முறை' என்று கூறி அவர் எழுந்து சென்றது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை அதிகமாக்கியது. இதுகுறித்து பல்வேறு இணையதளங்களும் பல கோணங்களில் எழுதி வந்தன. தனியார் எஃப்.எம் உடன் இணைந்து அத்தனை மீடியாவையும் முட்டாளாக்கியிருக்கிறார் கௌதமி.
அந்த தனியார் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கௌதமி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். அதை மக்களிடம் வித்தியாசமாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 'வெளிநடப்பு' நாடகமாம். தினந்தோறும் காலை 11 முதல் 2 மணி வரை கௌதமி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அந்த எஃப்.எம்மில் ஒலிபரப்பாகிறது.