ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து பிரமாண்டமாக வெளிவந்த படம் ‛முதல்வன்'. அரசியல் பேசிய இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஹிந்தியில் ‛நாயக்' என்ற பெயரில் ரீ-மேக்கானது. அர்ஜூன் ரோலில் அனில் கபூர் நடித்திருந்தார். நாயக் படமும் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நாயக்-2க்கான வேலைகள் துவங்கியுள்ளன. நாயக்-2விற்கான கதையை பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் படங்களின் கதாசிரியரும் ராஜமெளலியின் தந்தையுமான கேவி விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். கதை எழுதும் பணி முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்கள் யாரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை, முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைக்க நாயக்-2 படத்தை தயாரிக்கும் நிறுவனம் எண்ணியுள்ளது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.