ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2017-ம் ஆண்டு எனக்கு அமோகமாக உள்ளது. கைநிறைய படங்கள், காமெடி மட்டுமின்றி சில மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறேன் என்கிறார் இமான் அண்ணாச்சி. அதோடு, இமான் அண்ணாச்சி என்றாலே நெல்லை தமிழ் பேசிதான் நடிப்பார் என்று இருக்கும் நிலையில், ஒரு புதிய படத்தில் சென்னை தமிழ் பேசி நடிக்கிறேன். இதனால் இனிமேல் எல்லாவிதமான கதாபாத்திரங்களுக்கும் இமான் அண்ணாச்சி பொருந்தக்கூடியவர் என்கிற இமேஜ் ஏற்படும் என்கிறார். அவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சிங்கம்-3, டோரா ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
அவரிடத்தில், வடிவேலுவின் ரீ-என்ட்ரி உங்களைப்போன்ற காமெடியன்களை பாதித்துள்ளதா? என்றொரு கேள்வியை முன்வைத்தபோது,
வடிவேலுவின் ரீ-என்ட்ரி மற்ற காமெடியன்களை பாதித்ததா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. காரணம், எனது பாணியே வேறு. யாரையும் பின்பற்றாமல் எனக்கென்று ஒரு பாணி வைத்துதான் இதுவரை நடித்து வருகிறேன். குறிப்பாக, நெல்லை தமிழ் பேசி நடிப்பதுதான் அடையாளமாக இருந்து வருகிறது.
மேலும், இப்போது நான் நடித்து வரும் புதிய படங்களில் காமெடியனாக மட்டுமே நான் நடிக்கவில்லை. பலதரப்பட்ட குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறேன். அதில் ஒரு படத்தில் விவசாயி வேடத்தில் நடிக்கிறேன். க்ளைமாக்சில் நான் இறந்து விடுவேன். மனதை தொடும் வேடம். அதேபோல் இன்னொரு படத்தில் சென்னை தமிழ் பேசி நடிக்கிறேன். மற்றொரு படத்தில் செண்டிமென்ட் வேடத்தில் நடிக்கிறேன். இப்படி என்னை மாறுபட்ட கோணங் களில் வெளிப்படுத்தி வருகிறேன். அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது நல்லதொரு குணசித்ர நடிகராகி விடுவேன். இமான் அண்ணாச்சி எல்லாவிதமான கேரக்டர்களுக்கும் பொருந்தக்கூடிய நடிகர் என்கிற இமேஜ் ஏற்பட்டு விடும்.
முக்கியமாக, நான் நடிக்கும் படங்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் எந்த காரணம் கொண்டும் இரட்டை அர்த்த வசனங்களோ, சிறுவர்களின் மனதை பாதிக்கும் வார்த்தைகளையோ பேசி நடிக்க மாட்டேன். அந்தமாதிரி வசனங்கள் இருக்கும்பட்சத்தில் அதை நீக்கச்சொல்லித்தான் இப்போதுவரை நடித்து வருகிறேன். மேலும், இரட்டை அர்த்த வசனம் பேசிதான் நடித்தாக வேண்டும் என்றொரு கட்டாயம் ஏற்பட்டால் அப்போது நான் சினிமாவை விட்டே வெளியேறி விடுவேன் என்கிறார் இமான் அண்ணாச்சி.