ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நான் அவனில்லை-2 படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வா, அரவிந்த்சாமியை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், அப்படத்தின் நாயகியாக இறுதிச்சுற்று, சிவலிங்காபடங்களில் நடித்துள்ள ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய வேடம் உள்ளதாம். அதில் நடிப்பதற்கு சில நடிகைகளை பரிசீல ணை செய்து வந்த டைரக்டர் செல்வா, இனியாவை ஏற்கனவே பேசி வைத்திருந்தார்.
ஆனால், இப்போது அந்த படத்தில் நடிப்பதற்கு ஆண்ட்ரியாவும் முயற்சித்து வருகிறார். தற்போது அவரது கைவசம் தரமணி, வடசென்னை, துப்பறிவாளன் என சில மெகா படங்கள் இருப்பதால், இனியாவை விட ஆண்ட்ரியா நடித்தால் படத்திற்கு பலமாக இருக்கும் என்று நினைக்கிறாராம் செல்வா. ஆனால் இந்த சேதியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த இனியா, கேரளாவில் இருந்து ஓடோடி வந்து டைரக்டர் செல்வாவை சில தினங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். அப்போது இனியாவுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படவில்லையாம். என்றாலும் தனது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, தொடர்ந்து சென்னையில் முகாமிட்டு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறார் இனியா.