ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யாருடா மகேஷ், கல்கண்டு ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் டிம்பிள் சோப்டே. புனேயைச்சேர்ந்த நடிகையான இவர், அந்த படங்களில் இளசுகளை கவரும் வகையில் கவர்ச்சிகரமாக நடித்தபோதும், படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அடுத்தபடியாக தமிழில் படவாய்ப்புகள் இன்றி தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நாயகனாக நடித்துள்ள ஜெயிக்கிற குதிரை படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படம் இதற்கு முன்பு சத்யராஜ்-தேவயானி, வடிவேலு, கோவை சரளா நடிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கிய என்னம்மா கண்ணு படம் போன்று காமெடி கதையில் உருவாகியிருக்கிறது. மேலும், இதே படத்தில் டிம்பிள் சோப்டே மட்டுமின்றி அம்பிகா சோனி, ஸ்ட்ராவ்யா என இன்னும் இரண்டு நாயகிகளும் இருக்கிறார்களாம். என்றாலும் படம் முழுக்க ஜீவனுக்கு ஜோடியாக நடித்திருப்பது டிம்பிள் சோப்டேதானாம். அதனால் இந்த படம் தனக்கு தமிழில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கும் டிம்பிள் சோப்டே, பாடல் காட்சிகளில் இளசுகளை கவரும் வகையில் கவர்ச்சி தரிசனம் கொடுத்திருப்பதால், இதன்பிறகு கமர்சியல் டைரக்டர்களின் கவனம் தன் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கிறாராம்.