ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவோ அல்லது வேறு எந்த மொழி சினிமாவோ, முதல் படத் தோல்விக்குப் பிறகு ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் இயக்க வாய்ப்புகள் கிடைப்பது அரிதிலும் அரிது. சுமாரான முதல் படத்தைக் கொடுத்தவர்கள் கூட இரண்டாவது படத்திற்காக இரவு, பகலாக கோடம்பாக்கத்தில் அலைந்து திரிந்திருக்கிறார்கள். 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே தன்னுடைய அடுத்த படத் தேர்வில் இறங்கிவிட்டார் விஜய்.
இவர் இயக்கப் போகிறார், அவர் இயக்கப் போகிறார் என பலரைப் பற்றி தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தன்னை வைத்து 'அழகிய தமிழ் மகன்' என்ற தோல்விப் படத்தைக் கொடுத்த இயக்குனர் பரதனை அடுத்த பட இயக்குனராகத் தேர்வு செய்தார் விஜய். தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பல முன்னணி இயக்குனர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
விஜய் தன் மீது வைத்த நம்பிக்கையை இன்று வெளியான 'பைரவா' படத்தின் மூலம் காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர் பரதன். விஜய்யின் படத்தில் என்ன இருக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்பார்ப்போர்களோ அவை அனைத்தையும் வைத்து இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் பரதன்.
படத்தைப் பற்றி எந்த விதமான விமர்சனம் வந்தாலும் அடுத்து வரும் விடுமுறை நாட்களிலேயே 'பைரவா' படம் 'பிரேக் ஈவன்' ஆகிவிடும் என்கிறார்கள் கோலிவுட்டில்.