ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனராக மாறியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பை கடந்த வாரம்தான் முடித்தார். தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனிடையே பாகுபலி 2 படத்திற்கப் பிறகு ராஜமௌலி எந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது பற்றி இதுவரை எதுவும் சொல்லாமலே இருந்து வருகிறார் ராஜமௌலி. நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமௌலி தன்னுடைய அடுத்த படம் பற்றி கொஞ்சமாகப் பேசியுள்ளார்.
“என்றாவது ஒரு நாள் மகாபாரதத்தை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய படங்களுக்கும் காட்சிகளுக்கும் அமர் சித்திர கதா தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
ராஜமௌலியிடமிருந்து மற்றுமொரு பிரம்மாண்டத்தை மகாபாரதம் வடிவில் அடுத்த சில வருடங்களில் எதிர்பார்க்கலாம்.