ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கேபி சிவசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி 2017-19-ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற பிப்., 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தல் களம் பலமுனை போட்டியை சந்திக்க இருக்கிறது. குறிப்பாக சிறுபட தயாரிப்பாளர்களின் பிரச்னை, திருட்டு விசிடி பிரச்னையை மையமாக வைத்து இந்த தேர்தல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நியாயமாக நடத்த கோரி பல்வேறு வழக்குகள் தொரடப்பட்டுள்ளன. குறிப்பாக முருகதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் இன்று ஒரு வழக்காக ஏற்று கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கேபி சுப்ரமணியம் நியமிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.