ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய, என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா. இவருக்கு சமீபத்தில் டைரக்டர் பாலாவின் புதிய படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. பாலா படம் என்றதும் சொல்ல முடியாத சந்தோசத் துடன் ஓடோடிச்சென்று அவரை சந்தித்துள்ள ஜீவிதா, டைரக்டர் பாலாவின் 25 நிமிடத்துக்கு சொந்தக்காரி நான் என்று நினைக்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.
அந்த சந்திப்பு குறித்து ஜீவிதா கூறும்போது, டைரக்டர் பாலா சார் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் இன்ப அதிர்ச்சியடைந்தேன். அவரை சந்திக்க காலை 11 மணிக்கு வரச்சொல்லியிருந்தனர். ஆனால் நான் ஆர்வத்தில் 10.30க்கே சென்று விட்டேன். ஆனால் பாலா சார் நான் போய் இரண்டறை மணி நேரம் கழித்துதான் வந்தார். வந்தவர் என்னைப்பார்த்ததும், ஸாரிம்மா உங்களை காக்க வச்சிட்டேன் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எவ்வளவு பெரிய டைரக்டர் அவர். அவரது வருகைக்காக எத்தனை மணி நேரமென்றாலும் காத்திருக்கலாமே என்று எண்ணிக்கொண்டு, பெறவாயில்ல சார் என்றேன்.
அதையடுத்து, என்னைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தவர், காபி சாப்பிட சொன்னார். இப்பத்தான் சார் சாப்பிட்டேன் என்றேன். எனக்காக இன்னொரு காபி சாப்பிடுங்க என்றார். பின்னர் சிகரெட் பிடிக்க முற்பட்டபோது, உங்களுக்கு சிகரெட் புகை ஒன்றும் அலர்ஜி இல்லியே என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்ன பிறகுதான் சிகரெட் பிடித்தார். பின்னர், நீங்கள் பார்ப்பதற்கு என் பேமிலி டாக்டர் மாதிரி இருக்கிறீர்கள் என்றவர், இப்போது நான் இயக்கும் படத்தில் ஒரு பிளஸ்-2 படிக்கும் பெண்ணுக்கு அம்மா வேடம் இருக்கிறது. அதை நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பீல் பண்ணுகிறேன் என்றார்.
அதைக்கேட்டு, இப்போதே நான் அவ்வளவு வயதான அம்மாவாக எப்படி சார் நடிப் பது என்றேன். அதற்கு பெறவாயில்லை அப்படின்னா வில்லனின் மனைவியாக நடிக்கிறீர்களா? என்று சொன்னவர், ஆனால் அதில் உங்களுக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு இருக்காது. உங்களது திறமையை வீணடிக்க விரும்பவில்லை. நன்றாக யோசித்து முடிவெடுங்கள். உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை என்றார். அப்போது நான், சார் இப்ப நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று சொல்லவில்லை. மாறாக, உங்கள் படம் என்பதால் அழுத்தமான அக்கா, அண்ணி வேடங்கள் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றேன்.
அதற்கு, அந்த மாதிரி வேடம் இந்த படத்தில் இல்லை. நான் சொன்ன இந்த
கேரக்டர்களில் ஏதேனும் ஒன்றில் நீங்க நடிப்பதாய் இருந்தால் உங்கள் கேரக்டரை இன்னும் பெரிதாக்குகிறேன். அப்படி நடிக்க விரும்பவில்லை என்றாலும் பெறவாயில்லை. அடுத்து நான் உங்களுக்காக ஒரு கதை ரெடி பண்ணுகிறேன். அந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வைக்கிறேன் என்று சொன்னார்
அப்படி அவர் சொன்னது எனக்கு பெரிய சந்தோசமாகி விட்டது. எவ்வளவு பெரிய டைரக்டர் அவர். என்னிடம், உனக்கான வேடம் இதுதான். முடிந்தால் நடி, இல்லையேல் போய் விடு என்று சொல்லாமல் என் விருப்பத்தை தெரிந்து கொண்டு என்னை கட்டாயப்படுத்தாமல் பேசினார். அதோடு, அடுத்து உனக்காக ஒரு கதை ரெடி பண்ணுகிறேன் என்றார். இதையெல்லாம் நினைத்துப்பார்த்தால் நடப்பது நனவா இல்லை கனவா என்றே எனக்கு புரியவில்லை. என் வாழ்க்கை யில் டைரக்டர் பாலாவை சந்தித்த அந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அவர் படத்தில் நடிக்கிறேனோ இல்லையோ அவரை சந்தித்த அந்த 25 நிமிடங்கள் என் வாழ்நாளில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஜீவிதா.