ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து முடிக்கும் வரையில் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார் பிரபாஸ். அவருடைய இந்த ஈடுபாட்டையும், நம்பிக்கையையும் ராஜமௌலி ஏற்கெனவே பாராட்டியிருந்தார். இதனிடையே, 'பாகுபலி' படக்குழுவினருக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார் பிரபாஸ்.
“படப்பிடிப்பு முடிவடைந்தது. 'பாகுபலி' படத்திற்காக வேலை செய்ய ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மிகவும் அற்புதமான குழுவினர், இப்போது அனைவருமே எனது குடும்பத்தினர் ஆகிவிட்டார்கள். 'பாகுபலி' என்ற இந்த மிகப் பிரம்மாண்டமான படைப்பில் என்னை இணைத்த ராஜமௌலி, ஷோபு, பிரசாத் ஆகியோருக்கு எனது நன்றி. அதோடு, என்னுடன் நடித்த அற்புதமான மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு எனது நன்றி. இந்த அனுபவத்தை எப்போதுமே மறக்க மாட்டேன். இத்தனை வருடங்களாக எனக்கு ஆதரவும், அன்பும் அளித்த என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. உங்களது அன்பு இல்லாமல் இது நடந்திருக்காது. லவ்..யூ..ஜெய் மகிஷ்மதி”, என தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் பிரபாஸ்.