மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் சஞ்சய் குப்தாவும் ஒருவர். தற்போது இவர் இயக்கத்தில் ஹிருத்திக், யாமி கவுதம் நடித்துள்ள காபில் படம் வெளியாக இருக்கிறது. அடுத்தவாரம் காபில் ரிலீஸாக இருப்பதால் தற்போது படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். இதனிடையே இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளார். இதில் ரன்பீர், சஞ்சய் தத்தாக நடிக்கிறார். சஞ்சய்யின் வாழ்க்கையை படமாக்க வேண்டாம் என்று இயக்குநரும், சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பருமான சஞ்சய் குப்தா கூறியுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற சஞ்சய் குப்தா பேசும்போது... ‛‛தற்போது சஞ்சய்யின் வாழ்க்கையை படமாக அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவரின் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான விசயங்கள் எல்லோரும் அறிந்தது தான். எனவே, அவரின் வாழ்கை பற்றிய படத்திற்கு இப்போது என்ன அவசியம்?, மேலும் அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.