ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஜிகர்தண்டா' படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருதையும் பெற்றவர் பாபி சிம்ஹா. அந்தப் படம் கொடுத்த வெற்றியால் அடுத்து நடித்தால் நாயகனாகத்தான் நடிப்பேன் என அடம் பிடித்தார். அதன் பின் அவர் நாயகனாக நடித்த ''ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மசாலா படம், உறுமீன், பெங்களூர் நாட்கள், கோ 2, மீரா ஜாக்கிரதை, இறைவி” ஆகிய படங்கள் ஓடவேயில்லை. கூடவே 'மெட்ரோ' படத்தில் வில்லனாகவும், 'கவலை வேண்டாம்' படத்தில் இரண்டாவது நாயகனாகவும் நடித்தார். அவர் நாயகனாக நடித்து கிடப்பில் கிடந்த 'பாம்பு சட்டை' படம் எப்படியோ தட்டுத் தடுமாறி வெளியாக இருக்கிறது. 'வல்லவனுக்கு வல்லவன்' படம் பற்றி எந்த சத்தத்தையும் காணோம்.
இதனிடையே, 'நடித்தால் நாயகன் மட்டுமே' என்ற நிலையிலிருந்து பாபிசிம்ஹா இறங்கிவிட்டார் என்கிறார்கள். 'ரேணிகுண்டா' பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் பாபி சிம்ஹாதான் வில்லனாம். இதனால், பாபியை வைத்து 'திருட்டுப்பயலே' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்துள்ள சுசி கணேசன், பாபி மீது கடும் கோபத்தில் உள்ளாராம்.
கார்த்திக் சுப்புராஜ் வந்து பாபி சிம்ஹாவுக்கு கை கொடுத்தால்தான் உண்டு. ஆனால், கார்த்திக் சுப்புராஜுக்கே இப்போது வேறு யாராவது வந்துதான் கை கொடுத்து தூக்க வேண்டும்.