ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. இதை இயக்குநர் தாசரி நாராயணராவ் இயக்க உள்ளார். நாட்டியத்தில் தனது வாழ்க்கையை தொடங்கி, மேடை நாடகங்களில் ஆடி, சினிமாவில் நுழைந்து ஹீரோயினாக கொடி கட்டி பறந்து, பின்னர் அரசியலிலும் களம் புகுந்து தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிச., 5-ம் தேதி காலமானார். அவரின் மறைவு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமாவாக உருவாக பலர் முயற்சித்து வருகின்றனர். அதில், ஜெ., வேடத்திற்கு ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா பொருத்தமாக இருப்பர் என, கூறப்பட்டு சில போஸ்டர்களும் வெளிவந்தன. ஆனால் அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபலமான இயக்குநரும், 150 படங்களை இயக்கி சாதனை படைத்தவருமான தாசரி நாராயணராவ், ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக நம்பதகுந்த தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கு ‛அம்மா' என்று பெயர் சூட்டப்பட இருக்கிறது. இதற்காக ‛அம்மா' என்ற பெயரை தாசரி பதிவு செய்திருக்கிறார். தமிழ் - தெலுங்கு இரண்டு மொழியிலும் இப்படம் உருவாக உள்ளது. தற்போது திரைக்கதை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளதாம். கூடவே ஜெயலலிதா ரோலில் நடிக்க ஹீரோயின் தேர்வும் நடந்து வருகிறது. அனைத்தும் முடிவானதும் படம் பற்றிய முழு அறிவிப்பையும் தாசரி நாராயணராவ் அறிவிப்பார் என தெரிகிறது.