ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா. அரசிளங்குமரி, குலேபகாவலி, தாய் மகளுக்கு கட்டிய தாலி, ரங்கோன் ராதா, நல்லவன் வாழ்வான் உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 250 படங்களில் நடித்தவர் ராஜசுலோச்சனா. 17 வயதில் நடிக்கத் தொடங்கியவர் டி.ராஜேந்தர் இயக்கிய எங்க வீட்டு வேலன் படத்தோடு நடிப்பை முடித்துக் கொண்டார்.
சிறந்த நாட்டிய கலைஞரான ராஜசுலோச்சனா அமெரிக்காவில் பல ஆண்டுகள் நாட்டிய பள்ளி நடத்தினார். நடனம் கற்பது குறைந்து வருவதால் வருங்காலத்தில் நாட்டியம் இருக்காது என்று கருதிய ராஜசுலோச்சனா, தான் ஆடிய நடனங்களையும், அதில் செய்த புதுமைகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பதிவு செய்து வைத்திருந்நார். அதோடு நாட்டிய கலையின் நுணுக்கங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். வருங்கால சந்ததிகளுக்கு உதவும் வகையில் அதனை செய்திருந்தார். இதற்காக பல ஆண்டுகள் அவர் கடினமாக உழைத்தார்.
கடந்த 2013ம் ஆண்டு தனது 77வது வயதில் அவர் காலமானார். அவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே அமெரிக்காவில் குடியிருக்கிறார்கள். ராஜசுலோச்சனாவின் நாட்டிய ஆராய்ச்சியும், நாட்டிய நுணுக்கங்களை பதிவு செய்த டிஜிட்டல் பதிவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அது ராஜசுலோச்சனாவின் மகன், மகளிடம் உள்ளதா? அல்லது சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள அவரது வீட்டில் உள்ளதா.? என்று தெரியவில்லை. வருங்கால சந்ததிகளுக்காக ராஜசுலோச்சனா உருவாக்கிய பொக்கிஷம் இந்த உலகத்திற்கு கிடைக்குமா என்பதே நாட்டிய கலை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.