ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
30 வயதை கடந்து விட்டால் நடிகைகளின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டு விடும் என்கிற நிலை மாறி, இப்போதெல்லாம் 30 வயதுக்கு பிறகுதான் சில நடிகைகளின மார்க்கெட் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக, நயன்தாரா இந்தியாவிலுள்ள பல பிரபல நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகிக்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், அனாமிகா, மாயா படங்களைத் தொடர்ந்து டோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு மெகா படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களின் டைரக்டர் டிகே இயக்குகிறார். தற்போது கலெக்டர், போலீஸ், ஹாரர், கிரைம் கதைகளில் நடித்து வரும் நயன்தாரா இந்த படத்தில் ஒரு செண்டிமென்ட் கதையில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழில் உருவானபோதும், மலையாளம், தெலுங்கிலும் டப் செய்து வெளியிட ஏஜிஎஸ் பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாம். கொலையுதிர் காலம் படத்தில் நடித்து வரும்போதே இந்த படத்திலும் நடிக்கிறாராம் நயன்தாரா.