ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கஸ்தூரிராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜ்கிரண். அதன்பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்த அவர், அரண்மனைகிளி உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் நடித்தார். ஒரு கட்டத்தில் ஹீரோ மார்க்கெட் சரிந்து போகவே கேரக்டர் நடிகராகி விட்டார். குறிப்பாக, பாலாவின் நந்தா, லிங்குசாமியின் சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்கள் ராஜ்கிரணின் மார்க்கெட்டில் மறுபடியும் பரபரப்பு கூட்டியது. அந்த வகையில், கார்த்தி நடித்த கொம்பன் படம் வரை அழுத்தமான அப்பா வேடங்களில் நடித்து வந்த ராஜ்கிரண், தற்போது தனுஷ் இயக்கிவரும் பவர் பாண்டி படத்தில் மறுபடியும் ஹீரோவாகியிருக்கிறார்.
அதோடு, தான் ஹீரோவாக நடித்த காலகட்டத்தில் வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு நடித்து வந்த ராஜ்கிரண், இந்த படத்தில் தனது வில்லேஜ் இமேஜில் இருந்து விடுபட்டு, சிட்டி சப்ஜெக்ட்டில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் தனுஷ் டைரக்டர் என்பதால் அவர் என்ன சொல்கிறாரோ அப்படித்தான் நடிக்கிறாராம் ராஜ்கிரண். ஒரு காட்சியில்கூட தனிப்பட்ட முறையில் தனது ஸ்டைலில் அவர் நடிக்கவில்லையாம். சில காட்சிகளை படமாக்கும்போது உங்கள் பாணியில் நடியுங்கள் என்று தனுஷ் சொன்னாலும், இந்த படத்தின் டைரக்டரான நீங்கள் சொல்வது போல் நடிப்பதுதான் என் வேலை. என் இஷ்டத்துக்கு நடித்தால் கதை மற்றும் கதாபாத்திரங்களின் தன்மை மாறிவிடும். நீங்கள் பீல் பண்ணியுள்ள அவுட்புட் வராது என்று கூறிவிட்டாராம் ராஜ்கிரண்.