ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் திரையுலகில் சரித்திரப் படங்களுக்கென ஒரு அளவுகோலை நிர்ணயித்த படம் பாகுபலி. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் மொத்தமாக 700 கோடி ரூபாய் வசூலித்தது. தயாரிப்பிலும், உருவாக்கத்திலும், நட்சத்திரத் தேர்விலும், படத்தை வெளியிட்டதிலும் சரியான திட்டமிடலுடன் இந்தியத் திரையுலகத்திலேயே ஒரு பரபரப்பை ஏற்படுத்திய படம்.
அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பலருக்கும் அது போன்ற ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அந்த விதத்தில் தமிழில் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படங்களைக் கொடுத்த இயக்குனர் சுந்தர் .சியும் ஒரு சரித்திரப் படத்தை பிரம்மாண்டமாக இயக்க முடிவெடுத்தார். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைக்க சம்மதித்தார். படத்திற்கு சங்கமித்ரா எனப் பெயரிட்டார்கள். சுமார் 300 கோடி ரூபாய் தயாரிப்பு என்றும், 200 கோடி ரூபாய் தயாரிப்பு என்றும், விஜய், சூர்யா, மகேஷ்பாபு ஆகியோரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், முன்னணி நடிகர்களான அவர்கள் இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை.
அப்படியென்றால் பிரம்மாண்டமான செலவில் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்திற்கு வேறு யார் பொருத்தமானவர்கள் என கேள்வி எழுந்தது. ஒரு கட்டத்தில் இந்தப் படம் கைவிடப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று இந்தப் படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமான செலவு செய்து எடுக்கப்பட உள்ள படத்தில் முதல் நிலை நடிகர்கள் நடிக்காமல் தமிழில் பெரிய வசூல் நாயகர்களாக இல்லாத ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது பொருத்தமாக இருக்குமா என்றும் தற்போது கேள்வி எழுந்துள்ளது. ஆர்யா கடைசியாக நடித்த சில படங்கள் ஓடவேயில்லை. ஜெயம் ரவி கடந்த ஆண்டில் மட்டும் வெற்றிகளைக் கொடுத்தார். இந்த ஆண்டில் பெரிய வெற்றி எதுவும் இல்லை. வேறு யாரும் இந்தப் படத்தில் நடிக்க முன்வராததாலேயே இவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள்.
பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் கூட தெலுங்கில் முதல் நிலை நடிகர் இல்லை. இருந்தாலும் படம் மாபெரும் வெற்றியைப் பெறவில்லையா ?, என்றும் சிலர் கேட்கிறார்கள். எப்படியோ சங்கமித்ரா படம் வெளிவரும் போதுதான் அதில் ஆர்யாவும், ஜெயம் ரவியும் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசமுடியும். அதுவரையில் இந்தப் படம் பற்றி பல்வேறுவிதமான தகவல்கள் வந்து கொண்டுதானிருக்கும்.