ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகின 'வீரசிவாஜி' படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஓரளவுக்கு சுமாரான வெற்றியை மட்டுமே பெற்ற இந்த படத்தை தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து முடித்துள்ளார். முதலில் 'முடிசூடா மன்னன்' என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் பெயரை சமீபத்தில் சத்ரியன் என்று மாற்றினார்கள்.
சத்ரியன் படத்தை அடுத்து விக்ரம் பிரபுவின் தயாரிப்பில் 'ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' படநிறுவனம் சார்பாக தயாராகி வரும் 'நெருப்புடா' படம் தயாராகி வருகிறது. இந்தப்படங்களை தொடர்ந்து கரு பழனியப்பனின் உதவியாளரான அறிமுக இயக்குனர் சூர்யா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம் பிரபு. தன்னுடைய குருநாதரான கருபழனியப்பனை ஹீரோவாக வைத்து இயக்குவதற்காக சூர்யா எழுதிய கதையாம் இது.
கரு பழனியப்பனை வைத்து எடுக்க சரியான தயாரிப்பாளர் கிடைக்காததினால் அந்தகதையை விக்ரம்பிரபுவிடம் சொல்லி ஓகே வாங்கினாராம். இந்த படத்திற்கு 'பக்கா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விக்ரம் பிரபுவிடம் இந்தப்படம் குறித்து விசாரித்தபோது 'படம் குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது, இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்' என்கிறார்.