ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதை, தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் படமாக உருவாக உள்ளது. திரையுலகில் சாவித்ரி முத்திரை பதித்தது தொடங்கி அவரது இறுதி காலத்தில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் சமந்தா நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது மகாநதி தெலுங்கு படத்தில் சாவித்ரி வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தில் சமந்தாவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் சாவித்ரி வேடத்தில் நடிப்பது யார்? என்று விசாரித்தபோது, இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகை அந்த வேடத்தில் நடித்தால் தான் படத்தை இந்திய அளவில் வெளியிட முடியும் என்பதால், இந்தி நடிகை வித்யாபாலனிடம் அந்த வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதற்கு முன்பு, கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவான ‛தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் வித்யாபாலன் தான் சில்க்காக நடித்திருந்தார். அந்த வேடத்தில் நடித்தமைக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனால், இந்த படத்தில் சாவித்ரியாக அவர் நடித்தால் படத்திற்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.