சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் |
புதுமுகங்கள் இணைந்து 465 என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். "465 என்றால் இந்திய தண்டனை சட்டத்தின் ஒரு பிரிவு. இந்த பிரிவின் கீழ் வரும் தண்டனைகள் எந்த குற்றத்திற்கு உரியது. அந்த குற்றங்கள் எப்படி நிகழ்கிறது. அதற்கு பின்னணி என்ன என்பதை காரண காரியங்களோடு சொல்லும் திகில் படம் இது" என்கிறார் இயக்குனரும் ஹீரோவுமான சாய் சத்யம்.
இதில் சாய் சத்யம் ஜோடியாக புதுமுகம் நிரஞ்சனா நடிக்கிறார். இவர்கள் தவிர கார்த்திக்ராஜ், மனோபாலா, கிரேன் மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிலிப்.ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். சஷாங் ரவிச்சந்திரன் இசை அமைக்கிறார். எல்.பி.எஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.எல்.பிரபு தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.