ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கூடல்நகர் படம் மூலம் டைரக்டராக அறிமுகமான சீனுராமசாமி, தனது 2வது படமான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவர் அடுத்து நீர்ப்பறவைகள் எனும் படத்தை இயக்குகிறார். அழகான கடலோரக் காதல் கதையை சொல்ல வருகிறார் சீனு. படத்தின் நாயகனாக விமல் நடிக்கிறார். இதுவரை பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரித்து வந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ், முதன்முறையாக சின்ன பட்ஜெட் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் தன்னுடைய நீர்ப்பறவைகள் படத்தில் வசனம் எழுத பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை அணுகி இருக்கிறார் சீனு. ஏற்கனவே நான் கடவுள், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் ஜெயமோகன்.
இதுகுறித்து டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது, எனது படத்திற்கு வசனம் எழுத ஜெயமோகன் சாரிடம் கேட்டேன். அவரும் ஓ.கே.சொல்லியிருக்கிறார். எதார்த்தமாக அவர் எழுதும் வசனங்கள் நிச்சயம் எனது படத்திலும் பேசப்படும் என்றார்.
தற்போது ஜெயமோகன், மீனவர்களின் பிரச்சனையை மையப்படுத்தி மணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.