Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனுராமசாமி படத்திற்கு வசனம் எழுதும் ஜெயமோகன்...!

19 அக், 2011 - 14:39 IST
எழுத்தின் அளவு:

கூடல்நகர் படம் மூலம் டைரக்டராக அறிமுகமான சீனுராமசாமி, தனது 2வது படமான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவர் அடுத்து நீர்ப்பறவைகள் எனும் படத்தை இயக்குகிறார். அழகான கடலோரக் காத‌ல் கதையை சொல்ல வருகிறார் சீனு. படத்தின் நாயகனாக விமல் நடிக்கிறார். இதுவரை பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரித்து வந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ், முதன்முறையாக சின்ன பட்ஜெட் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் தன்னுடைய நீர்ப்பறவைகள் படத்தில் வசனம் எழுத பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை அணுகி இருக்கிறார் சீனு. ஏற்கனவே நான் கடவுள், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் ஜெயமோகன்.

இதுகுறித்து டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது, எனது படத்திற்கு வசனம் எழுத ஜெயமோகன் சாரிடம் கேட்டேன். அவரும் ஓ.கே.சொல்லியிருக்கிறார். எதார்த்தமாக அவர் எழுதும் வசனங்கள் நிச்சயம் எனது படத்திலும் பேசப்படும் என்றார்.

தற்போது ஜெயமோகன், மீனவர்களின் பிரச்சனையை மையப்படுத்தி மணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

19 அக், 2011 - 15:07 Report Abuse
 அறிக்கை அண்ணாச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.கடலோர காதல்னா எப்பிடி?எங்க முட்டம் ஏரியால பாரதிராஜா அண்ணாச்சி கடல் ஓர கவிதை எடுத்தாரே அதுபோலவா?அப்பிடிகிப்பிடி இந்த காலத்துல எடுத்து எங்கள சாவடி அடிச்சிராதீக அண்ணாச்சி..அது எம்பது தொன்நூரோட முடிஞ்சி போச்சி அண்ணாச்சி..எங்கள உட்டுறுங்க...நான் திருநெல்வேலிக்கு ஓடி போய்றேன்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in