ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பெரிய திரையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே துணிச்சலுடன் சின்னத்திரைக்கு வந்த நடிகை நளினி. தன் ஹீரோயின் இமேஜ் பற்றி கவலைப்படாமல் குண்டான உடம்பையே தனது புது இமேஜாக மாற்றி காமெடி நடிகையாகவும், வில்லியாகவும் நடித்தார்.
கிருஷ்ணதாசி தொடர்தான் அவரது முதல் தொடர். அதன் பிறகு கோலங்கள் தொடரில் நடித்தார். சின்ன பாப்பா பெரிய பாப்பாதான் அவரை காமெடி நடிகையாக எல்லா வீடுகளுக்கும் கொண்டு சென்றது. அதன் பிறகு திரைப்படங்களிலும் காமெடியாக நடிக்க ஆரம்பித்தார்.
2000மாவது ஆண்டில் சின்னத்திரையில் அறிமுகமான நளினியின் அனுபவம் 16 ஆண்டுகள். ஆனால் கடந்த சில வருடங்களாக அவருக்கும் தமிழ் சேனல்களுக்கும் சரியாக இல்லை. இதனால் தெலுங்கு சீரியல் பக்கம் ஒதுங்கினார். அடிப்படையில் அவர் ஆந்திரா என்பதால் அம்மா நா கொடலா என்ற தெலுங்கு தொடரில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் பக்கம் பல அழைப்புகள் இருந்தும் வரவில்லை.
இடையில் தான் முன்பு நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் நடித்தவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டார்லிங் டார்லிங் தொடரின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். காமெடி, வில்லத்தனத்தில் ஜொலித்த நளினிக்கு இதில் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கேரக்டர். அன்பான அம்மாவாகவும், மாமியாராகவும் நடிக்கிறார்.
"தமிழ் சேனல்களில் நடிக்க கூடாது என்ற எண்ணமில்லை. யார் மீதும் எந்த கோபமும் இல்லை. ஒரு மாறுதலுக்காக தெலுங்கில் நடித்தேன். அங்குள்ள ரசிகர்களுக்கு எனது கேரக்டர் பிடித்துவிடவே தொடரில் என் பங்கை அதிகரித்தார்கள். அதனால் தொடர்ந்து அங்கேயே நடிக்க வேண்டியதாயிற்று. டார்லிங் டார்லிங் தொடரில் நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்த ஒரு கேரக்டர் அதனால் உடனே ஒப்புக்கொண்டேன் என்கிறார் நளினி.