ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல் படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். அதன்பிறகு சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர் மற்றும் ஜன்னல் ஓரம், திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்தார். எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லாததால் கிளாமருக்கும் மாறினார் மனீஷா. ஆனபோதும் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திற்கு பிறகு அவருக்கு சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் அயிட்டம் பாடலுக்கு ஆடும் வாய்ப்பும், வடிவுடையானின் பொட்டு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பும்தான் கிடைத்தது.
மற்றபடி மீண்டும் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லையாம். அதனால் பல மாதங்களாக காத்திருந்த மனீஷா யாதவ், இனிமேலும் சினிமாவை நம்பி காலம் கடத்த வேண்டாம் என்று திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கப்போட முடிவெடுத்து விட்டாராம். இன்னும் சில மாதங்களில் அவரது சொந்த ஊரான பெங்களூரைச்சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கும், மனீஷா யாதவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.