ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் வெளியான பட்டதாரி படத்தில் அபிசரவணன்-அதிதி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அதையடுத்து இப்போது நாங்க வேலைக்கு போயிட்டா ஊரை யாரு பாத்துக்கிறது -என்ற படத்திலும் அவர்கள் இணைந்துள்ளனர். இது எதேச்சையாக அமைந்ததா? இல்லை சிபாரிசின் பேரில் நிகழ்ந்ததா? என்று கோலிவுட்டின் ஒரு டாக் எழுந்திருக்கிறது.
இதுபற்றி அபிசரவணனைக் கேட்டபோது, இந்த படம் ரவுடிசம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. அத்துடன் காதலும், காமெடியும் கலந்திருக்கிறது. இந்த படத்தில் நடித்த நானும், அதிதியும் மீண்டும் இணைவதற்கு காரணம் பட்டதாரி படம்தான். அந்த படத்தில் எங்களது ஜோடி பொருத்தம் அம்சமாக இருந்ததால் மீண்டும் எங்களை இணைத்து விட்டனர். அதோடு, இந்த கதைக்கும் நாங்கள் இருவரும் பொருத்தமாக இருப்பதாகவும் டைரக்டர் கூறுகிறார்.
மேலும், பட்டதாரி படத்தை விடவும் இந்த படத்தில் நாங்கள் பர்பாமென்ஸ் செய்வதற்கு நிறைய ஸ்கோப் உள்ளது. அதனால், இந்த படம் மூலம் கோலிவுட்டில் நிரந்தர இடம் பிடித்து விட வேண்டும் என்பதை மனதில் கொண்டு இருவரும் நடிப்போம். நாங்க வேலைக்கு போயிட்டா ஊரை யாரு பாத்துக்கிறது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது என்கிறார் அபி சரவணன்