கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |
இப்போதுள்ள நடிகைகள் ஆடைகளை குறைத்து ஆபாசமாகவும், அருவருப்பாகவும் நடித்து சினிமாவின் தரத்தை குலைத்துவிட்டனர் என்று சோனாலி பிந்த்ரே ஆதங்கப்படுகிறார். பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இந்தியிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்தி நடிகரும், இயக்குநருமான கோல்டிபெல்லை திருமணம் செய்த பின்னர், சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இருந்தும் டி.வி., நிகழ்ச்சிகளில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோனாலி பிந்த்ரேயை மீண்டும் சினிமாவில் நடிக்க சொல்லி சிலர் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார். இதுபற்றி சோனாலி பிந்த்ரே கூறும்போது, சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சமீபத்திய சினிமாக்களை பார்த்து, அதை கைவிட்டுவிட்டேன். இப்போதுள்ள நடிகைகள் எல்லாம் கவர்ச்சியாக நடிக்கிறேன் என்ற பெயரில், ஆடைகளை குறைத்து ஆபாசமாகவும், அருவருப்பாகவும் நடித்து சினிமாவின் தரத்தை கெடுத்துவிட்டனர். முன்பெல்லாம் நடிகைகள் தங்களது அழகை காட்டி நடித்தனர். அதில் சிலர் கவர்ச்சியும் காண்பித்துள்ளனர். நானும் கூட கவர்ச்சியாக நடித்திருக்கிறேன், ஆனால் அதில் ஆபாசம் இருந்தது இல்லை. ஆனால் இப்போதுள்ள நடிகைகள் அப்படி இல்லை. எனவே இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன் என்று ஆதங்கத்தோடு கூறுகிறார்.




