விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் குற்றமே தண்டனை படத்தில் நடித்த விதார்த், அதன்பிறகு மணிகண்டனின் அசோசியேட் சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நடித்துள்ளார். ஈராஸ் இன்டர்நேசனல் தயாரித்துள்ள இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்திருக்கிறார். கிராமத்து கதை சூழலில் உருவாகியுள்ள இந்த படம் தற்போது மெர்லின் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளது.
இதுபற்றி இயக்குனர் சுரேஷ் சங்கைய்யா கூறும்போது, ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் ஒரு அழுத்தமான மெசேஜை பதிவு செய்திருக்கிறேன். மேலும், படத்தின் தலைப்பை கேட்டதும், கோயில்களில் கிடா வெட்டுவது குறித்த கதையாக இருக்குமோ என்று கேட்கிறார்கள். ஆனால் இது வேறு கதை. சிறுதெய்வ வழிபாட்டை நான் தவறாக சித்தரிக்கவில்லை. இந்த படம் அனைத்துதரப்பினருக்கும் பிடித்தமானதாகவே இருக்கும்.
அதோடு, படத்தில் சொல்லப்பட்டுள்ள விசயத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் மெர்லின் திரைப்பட விழாவுக்கு படத்தை அனுப்பி உள்ளோம். ஜனவரி முதல் வாரத்தில் ரிசல்ட் தெரியும். அதையடுத்து ஒரு கிடாயின் கருணை மனு படத்தை திரைக்கு கொண்டு வரும் அடுத்தகட்ட வேலைகள் நடைபெறும் என்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கைய்யா.