ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நந்தா, பாண்டவர் பூமி படங்களில் குணசித்ர நடிகராக உருவெடுத்த ராஜ்கிரண், கோவில், சண்டக்கோழி, தவமாய் தவமிருந்து, காவலன், வேங்கை, கொம்பன் என பல படங்களில் அப்பா வேடங்களில் நடித்தார். தற்போது தனுஷ் தயாரித்து இயக்கி வரும் பவர்பாண்டி படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அவருடன் பிரசன்னா, நதியா, சாயாசிங், ரோபோ சங்கர் என பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை அடுத்து லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி-2 படத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண். இப்படத்தின் முதல் பாகத்தில் விஷாலுக்கு அப்பாவாக நடித்த ராஜ்கிரண் இரண்டாம் பாகத்திலும் அதே வேடத்தை தொடருகிறார். மேலும், இந்த படத்தில் நடிக்க சில நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷிடம் பேசியுள்ளனர். ஆக, முதல் பாகத்தில் மீராஜாஸ்மின் நடித்த வேடத்தை கீர்த்தி சுரேஷ் தொடரப்போகிறார். தற்போது மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளனில் நடித்து வரும் விஷால் அந்த படத்தை முடித்ததும் பிப்ரவரியில் சண்டக்கோழி-2வில் நடிக்கிறார்.