ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சிங்கம் 3 படத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக சி3 படம் உருவாகியுள்ளது. அடுத்தவாரம் டிச., 23ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் தியேட்டர்களில் ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது. இதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், சிங்கம்-3 படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட், சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் தமிழக அரசு ஆகியோர் டிச., 21-க்குள் உரிய பதில் அளிக்கும்படி கூறி வழக்கை ஒத்திவைத்தது.