ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வீட்டில் சினிமா பற்றி யாரும் பேச மாட்டோம், என, பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமாகும் நடிகை, தன்யா கூறினார்.சசிகுமார், கோவை சரளா நடிக்கும் இந்தப்படம் மூலம், தமிழில் அறிமுகமாகிறார், நடிகை தன்யா. இவர், பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி.திரையுலக பயணம் குறித்து, அவர் கூறியதாவது:படித்து பட்டம் பெற்ற பிறகே சினிமா என, வீட்டில் கூறினர். டிகிரி முடித்து, மேற்படிப்பு படிக்கும் போது, ராதா மோகனின், பிருந்தாவனம் படத்தில் நடித்தேன். அப்போது, பலே வெள்ளையத் தேவா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. தனிக்கொடி என்ற கேரக்டரில், மதுரைபெண்ணாக நடிக்கிறேன். தாத்தா தான் எனக்கு எல்லாமே. அவரது நேர்மை, நேரம் தவறாமை போன்றவை, சினிமாவுக்கு வரும் முன், நான் கற்ற பாடம். நடிப்பில் அவர் தான் எனக்கு முன்னுதாரணம். யதார்த்தமாக, பாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டுமென, அவரிடம் கற்றுக் கொண்டேன். நாங்கள் சினிமாவில் இருந்தாலும், யாரும் வீட்டில் சினிமா பற்றி பேசக்கூடாது என்பது தாத்தா உத்தரவு.சினிமாவுக்கு வரும் முன், 15 ஆண்டுகள் பரதம் கற்றேன். தாத்தாவின் பெயர் எனக்கு பலமாக இருந்தாலும், அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது. இந்தப் படத்தில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. என்னை, அறிமுக நாயகியாக பார்க்காமல் அனைவரும், அன்போடு கவனித்துக் கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.