பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சென்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ரஜினி பேசியதாவது:
ஆணாதிக்கம்மிகுந்த சமுதாயத்தில் தன்னுடைய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். பொதுவாழ்க்கையில் அவர் வைரம் போன்றவர் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான் பேசிய பேச்சால் ஜெயலலிதா மனது துன்பட்டது. போராட்டங்களையே வாழ்க்கையாக கொண்டவர் ஜெயலலிதா. பொது வாழ்க்கைக்காக தமது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர். ஜெயலலிதாவும் சோவும் நெருங்கிய நண்பர்களாக திகந்தனர்.ஜெயலலிதா என்ற பெரிய ஆத்மா மகாத்மா ஆகி விட்டது. சோதனைகளை சாதனைகளாக ஆக்கி காட்டியவர் , துணிச்சல் எதிர்நீச்சல் போன்றவற்றை ஜெயலலிதாவிடம் கற்க வேண்டும். என ரஜினி பேசினார்.