பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். ரன்வீர் நடிப்பில் தற்போது வெளியாகி வசூலை குவித்து வரும் படம் ‛பெபிகர்'. இப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இப்படத்தை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆதித்யா இயக்கிய ‛பெபிகர்' படத்தின் வெற்றியை பற்றி பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் புகழ்ந்து இருக்கிறார்.
இதைப்பற்றி கரண் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது...."‛பெபிகர்' படத்தை ஆதித்யா மிகவும் அழகாக இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. இப்படம் முற்றிலும் வித்தியாசமான படமாக அமைந்து இருக்கிறது" என்று கூறினார்




