இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரையுலக முன்னணி நடிகர், நடிகைள் திரண்டு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். என்றாலும் பலர் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததாலும், வெளிநாட்டில் இருந்ததாலும் கலந்து கொள்ள முடியவில்லை. இதையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் இன்று மாலை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
முதலில், ஜெயலலிதா படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், நாசர், விஷால், பொன்வண்ணன், வடிவேலு, நந்தா, குட்டி பத்மினி, சச்சு, நடிகை சங்கீதா, ஜெயமாலினி, கார்த்திக், ராஜேஷ், ஆர்.வி. உதயகுமார், ரோகிணி, ஜீவா, பசுபதி, சிவக்குமார், மோகன், சங்கீதா, லதா, கார்த்தி, அம்பிகா, ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கத்தின் மரகத மணியாக திகழந்த அம்மா என்று மக்கள் தங்கள் மனதில் வைத்து பூஜிக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய கலையுலக சகோதரி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நம்மை மீளா துயரில் நம்மை தவிக்கவிட்டு சென்று இருக்கிறார். அன்னாருடைய ஆத்மா சாந்தி அடையவும் , அவர்தன் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் பெருமைகளை பதிவுசெய்யவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. கலைக்காகவும் , பொது பணிக்காகவும் தம் வாழ்வை அர்பணித்த அவ்வாத்மாவிற்கு அஞ்சலி செலுத்த நடிகர் சங்க உறுப்பினர்கள் , உறுப்பினர் அல்லாத நடிகர்கள் , திரையுலக ஜாம்பாவான்கள் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.