பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மகாகவி பாரதியாரின் 124 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதியாருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், மாடிப்படியில் தவறி விழுந்த நடிகர் கமல், சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருந்து வந்தார். சுமார் 2 மாத ஓய்விற்கு பிறகு, தற்போது மீண்டும், தனது அடுத்த படமான சபாஷ் நாயுடு படத்தில் கமல் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன், அவர் மகள் ஸ்ருதிஹாசனும் நடித்து வருகிறார். சபாஷ் நாயுடு படத்திற்காக தற்போது அமெரிக்காவில் சூட்டிங்கில் இருந்து வருகிறார் கமலஹாசன். இந்நிலையில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கமல், டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரில் கமல் பதிவிட்டுள்ள கருத்தில், " எத்தனை பேரை எழுதவைத்தான் நம் பாரதி! அத்தனை கோடி நன்றி அவ்வாசானுக்கு. முன்னோர் தமிழை என்வரை கொண்டு சேர்த்தமைக்காகவும் கூட." என குறிப்பிட்டுள்ளார்.